Saturday, October 30, 2010

VALAIPPOO PATHIVIL EN KURAIKAL

                                                வலைப்பூ  பதிவில்   என் குறைகள்                   

                 11-08-2010  தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளியான "வலைப்பூ  ..ஒரு
வாய்ப்பூ " என்ற கட்டுரையைப் படித்தவுடன் நாமும் ஒரு வலைப்பூவைத் துவக்கினால் என்ன என்ற எண்ணம் எழுந்தது. இளவயதில் என் சுய திருப்திக்காக   நிறையவே எழுதுவேன். பத்திரிகைகளில் பிரசுரிக்க எந்த முயற்சியும் செய்யவில்லை.நாடகங்கள்  எழுதி இயக்கி நடிக்கும் ஆர்வமிருந்தது. ஐந்தாறு நாடகங்களை  மேடைஏற்றிய  அனுபவமும்  உண்டு. இந்தப்பின்னணியில்  என் எழுத்தார்வம் ஆனந்த விகடன்  கட்டுரையைப்  படித்தவுடன் வலைப்பூ துவங்கலாமா என்று சிந்திக்கசசெய்தது. கணினியில் மின்னஞ்சல் எழுத, படிக்க, மற்றும் சீட்டு விளையாடுவத என்ற அளவில் மட்டுமே என் அறிவு ,அனுபவம் இருந்தது. எனக்காக என் பேரன ஒரு வலைத்தளம் அமைத்துக்கொடுத்தான். முன்பின் வலைப்பூக்களையே  பார்த்திராத எனக்கு gmb writes என்ற தலைப்பும் வைத்துக் கொடுத்தான். என் முதல பதிவே அவனுக்கு நன்றி சொல்வதாக இருந்தது.
               நான் ஒரு வலைத்தளம் ஆரம்பித்து  எழுதினால்  படிப்பது யார். ? இப்படி ஒரு வலைத்தளம் இயங்குவதையே  யார்  அறிவார் ?என் உறவுகளுக்கு  தெரியப்படுததினால் ,தமிழில் படிக்கவும் ஆர்வம் காட்டவும் உள்ள உறவுகள் மிகச் சொற்பம் .என கனிடம் நான் இது பற்றிக் கூற, என்னையறிந்த  ஓரிருவர் எனக்கு உற்சாகமூட்டஎன் வலைப்பூவைப் படிப்பதாகவும்  அவனுக்கு வாக்களித்தனர். 
              இந்த நிலையில்  என் வலைப்பூவைத்  தமிழ்மணத்தில்  இணைக்க முயன்றேனநிறைய  முயற்சிகள்  தோல்வியடைந்தன.. தமிழ்மணத்தில்  இணைக்கும்  முறை தமிழில் இருந்ததாலும்  , எனக்குத் தெரிந்த  கணினி        அறிவுள்ளவர்களுக்குத தமிழ் ெரியாததாலும் (என் பேரன்  உட்பட ) ஆங்கிலத்தில் செய்முறை கேட்டு  எழுதிப் பெற்று  ஒரு வழியாக தமிழ்மணத்தில்  இணைத்தும்  விட்டேன். சரி ..! தமிழ்மணத்தில் நான் இடுகை இட்ட ஒரு நாள் மட்டுமே  என் வலைப்பூ இருக்கும் .கூடவே  முந்நூறுக்கும் மேற்பட்ட பதிவுகளும் இருக்கும். இந்நிலையில் நான் எழுதுவதை  யார்யார் படிப்பார்கள்  என்று எப்போதுமே எனக்கு ஒரு எண்ணம் உண்டு. இருந்தாலும்   என்  மகன்  மூலம் கணினி மூலம் மட்டுமே அறிமுகமான சித்திரன்  என்று அறியப்படும்  திரு. ரகுவும் திருமதி. ஷக்திப்பிரபா அவர்களும் என் பதிவுகளைப் படித்து என்னை உற்சாகப்படுத்துகின்றனர் ,மேலும் சில பின்னூட்டங்களைப் பார்க்கும்போது இன்னும் சிலரும் என் பதிவுகளைப் படிக்கிறார்கள்  என்று அறிய முடிகிறது. அவர்களுக்கெல்லாம்  என் நன்றி.
             நான் இந்தக்  கட்டுரையை  எழுதுவதன்  நோக்கமே, என் வலைப்பதிவுகளில்   என் எழுத்துக்கள்  மட்டுமே          ஈர்க்க  வேண்டும்  பெரும்பாலானவர்களின்வலைத்தளங்கள்  தோற்றப்பொலிவிலும்  கணினியை  உபயோகப்படுத்தும்  திறமை மற்றும் கணினி நுட்பங்களை கையாளும்  விதத்திலும்  எங்கோ இருக்கிறார்கள். தினம் தினம்  எத்தனைபேர்  உலகின்  எங்கெங்கிருந்து வலைப்பதிவுகளைப்  பார்க்கிறார்கள்
படிக்கிறார்கள் போன்ற செய்திகள் scroll  ஆவதும் பதிவுகளைத் தொடருபவர்கள்   யாரயார் என்ற விவரங்களும் , பதிவுகள் தமிழ்மணத்தில்  வரும்போதே நிறைய  மறுமொழி, பின்னூட்டங்களுடன்  பிரசுரமாவதும்  பிரமிப்பூட்டுகிறது. நான்  அந்த நிலையை இப்போது எனக்கு  இருக்கும் கணினி அறிவில்  எட்ட முடியுமா என்று தெரியவில்லை.
            நான் என் வலைப்பூவில் பதிவிடும்போது  இருக்கும் தோற்றம்  தமிழ்மணத்தில வெளிவரும்போது நிறையவே  மாறி வருகிறது. அதைப் பார்க்கும்போது  எழுத்தால ஈர்க்கப்படுபவர்கள்  கூட அது பிரசுரமாகும் குறையால்  படிக்காமல்  விட்டு  விடுவார்களோ  என்று தோன்றுகிறது.
           தமிழில்  எழுத்துப்பிழை  இல்லாமல் வெளியாக ஆங்கில  எழுத்துக்களை  கணினியில்  தட்டும்போது  நிறையவே சிரமப்பட வேண்டியுள்ளது. ஒரு சிறிய  பதிவை வெளியிட  சில சமயம் ஒரு நாளைக்கு  மேல் மேனக்கேடவேண்டி  இருக்கிறது.
           சுலபமான  முறையில் என் பதிவுகளை தோற்றத்தில்  மெருகேற்ற  ஏதாவத வழி       இருந்தால்   மற்ற  பதிவர்கள் ஆலோசனை  கூறலாம். பதிவுகளின்  தரத்துக்குநானே  பொறுப்பு. வலைப்பூ தொடங்கிய இரண்டு  மாதத்தில்  உற்சாகமூட்டும்  வகையில்  என்னை முற்றுமே  அறியாத சிலர் என்னை ஊக்குவிப்பது   திருப்திஅளிக்கிறது. 
          எழுதப்படும்  விஷயத்தில், தரத்தில், சிறப்பாக  செயலாற்ற முயற்சி  செய்ய ேண்டும். எனக்கு  எழுதுவதற்கு  நிறையவே  விஷயங்கள்  இருக்கின்றன. அதைபபடித்துப்  பகிர்ந்து  கொள்ள என் வாசகர் ட்டமும்  விரிவடையும்  என்று  நம்புகிறேன். 
                                         ----------------------- ------------------------ -- --------



  














    









3 comments:

  1. முதலில் NHM writer என்கிற மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவுங்கள். அதைப்பயன்படுத்தி தமிழில் எழுதுவது சுலபம். இந்த மென்பொருள் software.nhm.in/products/writer
    இந்த சுட்டியில் கிடைக்கும்.

    மேலும் சந்தேகம் இருந்தால் என்னுடைய மின்னஞ்சலுக்கு எழுதவும்.
    drpkandaswamy1935@gmail.com

    ReplyDelete
  2. nhm software is installed in my computer. but I do not know how to correct the spelling mistakes.For instance ன gets typed when I want the other "na"

    ReplyDelete
  3. Aiya, I'm Prasad's friend, he passed on this link a few months back and I didn't have the time to follow. I like your style and hope you continue the good work. Would like to comment in Thamizh but lack the necessary software for same.

    ReplyDelete