Thursday, September 9, 2010

comment on thiru. chithranswriting on smoking

     திரு .சித்ரனின்  வலைப்பதிவுகளைப்  பார்த்துக்கொண்டிருந்தேன் . சிகரெட்  புகைப்பது  பற்றி  அவர்  எழுதியதைப் படித்தபோது  எனக்கு ஒரு சம்பவம்  நினைவுக்கு வந்தது .கோவாவில்  ஒரு நாள் நான்  ஒரு ஹோட்டல் லௌஞ்சில் புகை பிடித்துக்கொண்டிருந்தேன் . ஒரு பெரியவர்  நான் புகைப்பதை  சற்று நிறுத்த முடியுமா  என்று   கேட்டுக்கொண்டார் , நான் மன்னிப்பு  கேட்டு  சிகரெட்டை  அணைத்து. விட்டேன் அவர் யாரிடமும் சிகரெட் புகைக்கவேண்டாம்  என்று அறிவுரை  கூறுவது  இல்லை என்றார் . அதற்கு ஒரு கதையும்  சொன்னார் . ஒரு முறை அவர் ரயிலில்  பயணம்  செய்து கொண்டிருந்தபோது  ஒரு வாலிபன்  விடாமல் புகைத்துக்கொண்டிருப்பதை  பார்த்துக்கேட்டாராம் , ஒரு நாளில்  எவ்வளவு சிகரெட்  புகைக்கிறார்  என்று.. அவன் சுமார்   15  முதல்  20 வரை  இருக்கும் என்றானாம் . சிகரெட்டின்  விலையை  கேட்டு  அவர்  ஒரு நாளைக்கு சுமார் ரூ .50/-வரை செலவு செய்பவர் ஒரு மாதத்துக்கு ரூ 1500/- வீதம் வருடத்துக்கு ரூ 18000/- என்றும்  பத்து வருடங்களில்  அது சுமார் 18 லட்சம்  ஆகுமென்றும்  அதனை  சேர்த்து வைத்தால்  ஒரு வீடு கட்டிக்கொள்ளலாம்  என்றும் அறிவுரை கூறினாராம் . சற்று  நேரம்  ஒன்றுமே  பேசாமல்  இருந்த  அந்த வாலிபன்  பெரியவரிடம்  அவர் எவ்வளவு  வீடு கட்டியிருக்கிறார்  என்று கேட்டானாம் .தினப்படி  காலம் தள்ளுவதே  கடினமாக இருக்கும்போது  வீடு எங்கே  கட்டுவது  என்று பெரியவர்  கூறினாராம் . அதற்கு  அந்த வாலிபன்  தான் மூன்று வீடுகள்  கட்டியிருப்பதாக  சொன்னானாம .
              அதன் பிறகு பெரியவர்  யாரிடமும்  சிகரெட் புகைப்பது பற்றி  அறிவுரை  கூறுவதை  நிறுத்திவிட்டாராம் .










No comments:

Post a Comment